"ஓம் நமச்சிவாய"

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.  இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று.  திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்திஇ தலம்இ தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில் இறைவன் கோணேச்சரரும் இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து  தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.

மகா சிவராத்திரி நகர்வல விபரம்

   புதிய தகவல்கள்

திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் தங்குமிடம்

இவ் யாத்திரிகர் தங்குமிடம் மூலம் பெறப்படும் வருமானங்கள் அனைத்தும் திருக்கோணேஸ்வரம் சிவபூமி சிறுவர் மனவிருத்தி பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முழுமையாக பயன்படும். மேலும் இவ்விடுதியை முன்கூட்டிய பதிவினூடாக தாங்கள் பதிவுசெய்யலாம்.
பதிவுசெய்ய...